×

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிறிஸ் லின் வேண்டுகோள்

மும்பை: ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ் லின் அறிவுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான கிறிஸ் லின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளேன் என கூறினார். எங்களை விட மிக கடுமையான சூழலில் மக்கள் இருப்பதை நான் அறிவேன். நாங்கள் மிகக் கடுமையான உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தே வருகிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறோம். எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம் என கூறினார். அபாயங்களை அறிந்தே  வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், ஐபிஎல் முடிந்த பிறகு பத்திரமாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார். …

The post ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானத்தில் ஆஸ்திரேலிய திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிறிஸ் லின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : IPL ,Chris Lynn ,Mumbai ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு